சிரியாவில், ஆபத்தின் பிடியில் இருக்கும் 50 இலட்சக் குழந்தைகள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
சிரியாவில் வெடிக்கும் தன்மையுள்ள ஆயுதங்களால் 50 இலட்சக் குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர் என்றும், அவர்களுக்கு உடனடி ஆதரவுத் தேவை என்றும் கூறியுள்ளது அந்நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனம்.
பிப்ரவரி 4, செவ்வாய்க்கிழமை, இத்தகவலை வழங்கியுள்ள அந்நிறுவனம், மோதலால் 72 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும், அவர்களில் பாதி பேர் குழந்தைகள் எனவும் தனது எக்ஸ்தள பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளது.
மேலும் வெடிக்கும் தன்மையுள்ள ஆயுதங்களால் 50 இலட்சக் குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர் என்றும், 24 இலட்சம் குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறி உள்ளனர் என்றும் உரைக்கும் அவ்வமைப்பு, மேலும் 10 இலட்சம் குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறும் ஆபத்தில் உள்ளனர் எனவும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளது.
அந்நாட்டுக் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பு, மாண்பு மற்றும் நம்பிக்கையுடன் மீண்டும் கட்டியெழுப்ப யுனிசெஃப் பணியாற்றி வருகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்