23 கோடிக்கும் அதிகமான சிறுமிகள் மற்றும் பெண்களின் பிறப்புறுப்பு சிதைவுக்கு உட்பட்டுள்ளது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
23 கோடிக்கும் அதிகமான சிறுமிகள் மற்றும் பெண்களின் பிறப்புறுப்பு சிதைவுக்கு உட்பட்டுள்ளன என்றும், 2030-ஆம் ஆண்டில் 2 கோடியே 70 இலட்சம் பேர் இதேநிலையைச் சந்திக்கும் பேராபத்தில் இருக்கின்றனர் என்றும் யுனிசெஃப் நிறுவனம், உலக நல அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதி அமைப்பும் கவலை தெரிவித்துள்ளன.
சில நாடுகளில் இதனை நீக்குவதற்கான முன்னேற்றம் தெளிவாகத் தெரிகிறது என்றாலும், காம்பியாவில் தடைகளை நீக்குவதற்கான முயற்சிகள் போன்ற சவால்கள் தொடர்கின்றன என்றும் அதன் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உலகளவில் FGM எனப்படும் பெண் பிறப்புறுப்பு சிதைத்தலை ஒழிப்பதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கு வலுவான கூட்டணிகள், கொள்கை அமலாக்கம் மற்றும் முதலீட்டிற்கு இந்த நிறுவனங்கள் மூன்றும் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்